கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-08-30 17:00 GMT

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. அதில் வந்தவாசி, தென்னாங்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். காலை, மாலை வேளையில் கல்லூரிக்கு சென்று வர போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஓரிரு பஸ்களே இயக்கப்படுவதால் கல்லூரி மாணவர்கள் அந்தப் பஸ்களில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

-வீரப்பன், தென்னாங்கூர். 

மேலும் செய்திகள்