விபத்துக்கு வழிவகுக்கும் மண் குவியல்

Update: 2023-05-14 15:49 GMT

விபத்துக்கு வழிவகுக்கும் மண் குவியல்

திருப்பூர் நெசவாளர் காலனியில் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். குறிப்பாக இருசக்கரவாகன ஓட்டிகள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகிறார்கள். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் இருபுறமும் அதிகளவில் மண்குவியல் காணப்படுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் பின்னால் வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது மண் குவியலில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண்குவியலை அகற்ற வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மணி, திருப்பூர்.

மேலும் செய்திகள்