பஸ்சின் படியில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-22 10:38 GMT

திருவண்ணாமலையில் இருந்து கலசபாக்கம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் பலர் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். இது போல் தினமும் மாணவர்கள் பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். தவறி விழுந்தால் விபத்து ஏற்படும் என்று ஆபத்தை உணராமல் அவர்கள் பயணம் செய்வதை காண்போர் நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

-விஷ்வா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி