நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்தூர் வழியாக மேட்டூர் வரை காலை 4.45 மணிக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலையில் ராசிபுரம் செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் ராசிபுரம் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.மணிமுத்து, வெண்ணந்தூர், நாமக்கல்.