தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்திற்கு இரவு நேரத்தில் ஒரத்தநாட்டிலிருந்து செல்லம்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் செல்லம்பட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஒரத்தநாடு.