சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இந்தநிலையில் பள்ளி நுழைவு வாயில் முன்பு காலை முதல் மாலை வரை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிக்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அங்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா ?
-எஸ்.டி.வெங்கடேசன், ஜாரிகொண்டலாம்பட்டி, சேலம்.