போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-01 11:54 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஜார் பகுதி, கலவை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வரும் நபர்கள் தங்களது வாகனங்களை கடையின் முன்பாக நிறுத்தி விட்டுச் சென்று மளிகைப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வாங்குகின்றனர். அவ்வாறு வாகனங்களை கடை முன்பாக விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடை உரிமையாளர்களும் வாகனம் நிறுத்த இடம் ஒதுக்காமல் கடை நடத்துவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
சரவணக்குமார் ஆற்காடு

மேலும் செய்திகள்

பஸ் வசதி