நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டதால் பஸ்கள் அந்த வழியாக சென்று வருகிறது. இதனால் பழைய பஸ் நிலையம் வழியாக பஸ்கள் செல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பஸ்கள் மட்டும் அந்த வழியாக புதிய பஸ் நிலையம் சென்று வந்தது. தற்போது அரசு பஸ்களும் பழைய பஸ் நிலையத்துக்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் பழைய பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையம் சென்று பிற ஊர்களுக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜீவானந்தம், சேந்தமங்கலம், நாமக்கல்.