விபத்து அபாயம்

Update: 2023-06-25 17:14 GMT

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் அருகே பழைய சூரமங்கலத்திற்கு செல்வதற்கான சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கு செல்லும் நுழைவு வாயிலில் மழைநீர் செல்வதற்காக இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன. தற்போது இந்த இரும்பு கம்பிகள் பழுதடைந்து வளைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கம்பிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிதியோன், சோளம்பள்ளம், சேலம்.

மேலும் செய்திகள்