சேலத்தில் அரசு கலை கல்லூரி, எல்லை பிடாரி அம்மன் கோவில் அருகே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணித்து போக்குவரத்தை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தமிழ்வேல், சேலம்.