நீண்ட வரிசையில் வாகனங்கள்

Update: 2023-05-31 17:19 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சேலம், சங்ககிரி செல்லும் வாகனங்கள் மற்றும் திருச்செங்கோடு சாலையில் செல்கின்ற வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் பஸ் நிலைய நான்கு ரோட்டில் செல்லும்போது போக்குவரத்து தடை ஏற்பட்டு நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதனால் வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஓரிரு நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை தவிாக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-பாலா, பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி