போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-24 14:15 GMT


திருவாரூர் வடக்கு வீதியில் முருகர் ஐயப்பன் என ஏராளமான கோவில்கள் உள்ளன. மேலும் இந்த வழியாக ஏராளமான அரசு, தனியார் வாகனங்கள் செல்கின்றன. வடக்கு வீதி வழியாக கனரக வாகனங்களில் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று வருகின்றன. இதனால் மணல் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டிக்கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்துவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் குவிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்

பஸ் வசதி