சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

Update: 2023-05-21 17:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் வெவ்வேறு வழக்குகளுக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் விசாரணைக்காக வரும் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். இந்த வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து இருக்கின்றன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

-தமிழ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி