பஸ்கள் இயக்கப்படுமா ?

Update: 2023-05-21 17:40 GMT

கிருஷ்ணகிரி அரசு நகர போக்குவரத்து பணிமனையில் இருந்து பர்கூர் கொண்டப்பநாயனபள்ளி, பாகிமானூர் கூட்ரோடு, வழியாக கிருஷ்ணகிரிக்கு இரவு 8 மணி அளவில் நகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 2 ஆண்டுகளக்கு முன் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் இந்த பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-ரவி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி