போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-10 17:39 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக அண்ணா சிலை பகுதியிலிருந்து காமராஜர் சிலை பகுதி வரை உள்ள சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனபால், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி