பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-03 14:49 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சாலையில் உள்ள குடிதாங்கி சேரி பகுதியில் பஸ் நிறுத்தம் சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை தண்ணீர் ஒழுகிறது. இதன் காரணமாக பஸ் நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் மது பிரியர்கள் குடித்துவிட்டு காலி பாட்டில்களை போட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குடிதாங்கி சேரி

மேலும் செய்திகள்

பஸ் வசதி