போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-30 17:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா 4 ரோடு சந்திப்பில் சேலம், வேலூர், திருவண்ணாமலை, பெங்களூரு, தர்மபுரி செல்லும் புறநகர் பஸ்கள், கார், லாரிகள் சென்று வருகின்றன. சாலையோர கடைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வருவோர் நெடுஞ்சாலை ஓரம் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ரவுண்டானா 4 ரோடு சந்திப்பில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும்.

-சுதாகரன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்