நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் ஆயில்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உரிய பஸ் நிறுத்தம் இல்லாததால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி மங்களபுரம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அல்லது நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபால், நாமகிரிப்பேட்டை, நாமக்கல்.