போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-12 14:03 GMT


நாகை மாவட்டம் நெய்விளக்கு கடைத்தெருவில் அரசு மதுபானக்கடை உள்ளது. மது குடிக்க வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்கு வரத்துநெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்

பஸ் வசதி