மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-04-05 12:06 GMT


திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா எரவாஞ்சேரியில் இருந்து சென்னைக்கு தினமும் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் அதி காலை 5 மணிக்கு சென்னை சென்றடையும். பொதுமக்களுக்கு மிகவும் நன்மையாக இருந்தது. ஆனால் தற்பொழுது இரண்டு வருடமாக இந்த பஸ் இரவு 7 மணிக்கு எரவாஞ்சேரியில் இருந்து புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு சென்னை சென்றடைகிறது இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மீண்டும் மறுநாள் பஸ் எரவாஞ்சேரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாய்ராம் வெங்கடேஷ், திருவாரூர்

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி