பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

Update: 2023-03-05 16:27 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வெள்ளாளப்பட்டி ஊராட்சி பஸ் நிலையத்துக்கு தேக்கம்பட்டி, வட்டக்காடு, செங்கரடு, நாலுகால்பாலம் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் நிழற்கூடம் ஏதும் இல்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-இளங்கோவன், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்