பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2023-03-01 16:49 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் புதுபாலம் அருகே சேலம் மெயின் ரோடு உள்ளது. அந்த சாலையில் கீழ் மேட்டூர், சேலம் செல்பவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கோபிநாத், மேட்டூர், சேலம்.

மேலும் செய்திகள்