போக்குவரத்து இடையூராக குதிரைகள். ....

Update: 2023-01-18 11:44 GMT

.

திருவாரூரில் சாலையில் கடந்த சில மாதங்களாக குதிரைகள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. அப்போது, சில குதிரைகள் கத்திக்கொண்டே சாலையில் அங்கும் இங்குமாக தலைத்தெறிக்க ஓட்டம் பிடிக்கின்றன. இதனால், வாகனங்கள் ஓட்டி வருபவர்கள் மற்றும் நடந்து வரும் பொது மக்கள் நிலை தடுமாறுகின்றனர். இதனால், விபத்துகள் மற்றும் உயிர்பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால், சாலையில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்