அதிவேகம் ஆபத்து

Update: 2023-01-04 16:34 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலாவாக வரும் சில வெளிமாநில வாலிபர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அவ்வாறு வரும்போது சேந்தமங்கலம் பகுதியில் இருந்து அடிவாரப் பகுதியான காரவள்ளி வரை வேகமாக சென்று வருகின்றனர். இதனால் அவ்வழியே மற்ற வாகனங்களில் செல்வோர் சற்று அச்சத்துடனே செல்கின்றனர். எனவே வேகத்தை கட்டுப்படுத்தி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வரும் வெளிமாநில வாலிபர்கள் நிதானமாக செல்ல அறிவுறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்துரு ,சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி