பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2023-01-01 17:34 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி செல்லும் வழியில் பன்னீர்குத்திபாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில், மழை காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி பன்னீர்குத்திபாளையம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

-ப.குமார், திருச்செங்கோடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்