வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2022-12-25 17:37 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் பொன்குறிச்சி அருகே தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தின் அருகில் இருபக்கமும் வேகத்தடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மீது வெள்ளை கோடு போடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

-பழனி, ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி