கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2022-12-07 14:41 GMT


திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிகாடு சனீஸ்வரன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில் மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும் செய்திகள்