பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-11-23 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி வழியாக சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இந்தநிலையில் அந்த பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் காளிப்பட்டி இறங்கும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் காளிப்பட்டியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறையினர் அறிவித்தனர். ஆனால் ஒரு சிலபஸ்கள் மட்டுமே அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-செந்தில்குமார், காளிப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி