மயிலாடுதுறையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. மணிக்கூண்டு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள போக்வரத்து சிக்னல் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து சிக்னல் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை