ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பார்களா?