பேனர்களால் விபத்து அபாயம்

Update: 2022-09-24 17:46 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள், திருமண வாழ்த்து, கோவில் திருவிழா, கும்பாபிஷேகம், கண்ணீர் அஞ்சலி போன்றவைகளுக்கு பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்கள் கடந்தும், அதனை அகற்றுவதில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

-ராஜபாண்டியன், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்