சேலம் கோரிமேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். இங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் மாணவ- மாணவிகள் வெயில், மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்னுசாமி, சேலம்.