சாலையோரத்தில் வாகனங்கள்

Update: 2022-09-20 15:03 GMT


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் மடத்துத்தெருவில் அதிகமான வணிக வளாகங்கள்,மளிகை,காய்கறிகடைகள்,ஆஸ்பத்திரி,கோவில்கள் உள்ள பகுதியாகும்.ஆனால் இங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கும்பகோணம்.

மேலும் செய்திகள்