பஸ் இயக்க கோரிக்கை

Update: 2022-09-13 16:58 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து பேளுர் வழியாக பாப்பா நாயக்கன்பட்டி வரை செல்ல இரவு 9.50 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. கொரோனா முதல் அலைக்கு முன்பு வரை இரவு 10.20 மணிக்கு அரசு பஸ் இயங்கி வந்தது. இப்போது இந்த வழி தடத்தில் இயங்கவில்லை. இதனால் சேலம் போன்ற ஊர்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பும் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரவு நேரத்தில் மீண்டும் இந்த பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூவிழி, சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி