கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-12 11:38 GMT


.நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகின்றது. இந்த பஸ் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகின்றது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த பஸ்சில் தான் பயணம் செய்கிறார்கள்.இதனால் கூட்டம் அலைமோதிகொண்டு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மாணவர்கள், நாகூர்.

மேலும் செய்திகள்