தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வகுத்தனூர் மற்றும் ஆண்டிப்பட்டி வழியாக கம்பைநல்லூர் மற்றும் அரூர் பகுதிக்கு இதுவரை பஸ் வசதி இல்லை. இதனால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண் ராஜ், வகுத்தானூர், தர்மபுரி.