தர்மபுரி சூடாமணி தெருவில் ஏராளமான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கொண்டுவரப்பட்ட மணலை சாலையில் குவித்து வைக்கப்பட்டு பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் காற்று வீசும் போது வீடுகளுக்குள் மணல் படிந்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிழ்செல்வன், ஸ்ரீராம் காலனி. தர்மபுரி.