உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-10 10:28 GMT

திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகம். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். திருப்பூரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய பஸ் நிலையம் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் அந்த பகுதிக்கான தற்காலிக தீர்வு மட்டுமே. ஆனால் அதன்பிறகு காமராஜர் சாலையில் இருந்து அனுப்பர்பாளையம்புதூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த இடைப்பட்ட சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். எனவே இதற்கு தீர்வு காண கோவையில் அவினாசி சாலையில் இருந்து நீலாம்பூர் வரை கட்டப்படும் வரும் உயர்மட்ட மேம்பாலம் போல், இங்கும் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முதல் அனுப்பர்பாளையம்புதூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முயற்சி எடுத்தால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதிகாரிகள்தான் முயற்சி எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி