நிழற்கூடம் இல்லாத பஸ் நிறுத்தம்

Update: 2022-09-07 17:12 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு வழியாக நகரின் பல பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் 4 ரோடு பகுதி காலை, மாலை நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிழற்கூடம் மேம்பால பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் மழை பெய்யும் போது பயணிகள் ஒதுங்க கூட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பரசு, 4 ரோடு, சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி