நாகை மாவட்டம் திருமருகலில் பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் ,திருமருகல்.