பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-06 17:49 GMT

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் தாலுகா ஏ.என்.மங்கலம் முதல் கூட்டாத்துபட்டி வரை எரிப்புதூர், தேங்கல் பாளையம், செங்குட்டை, பாலப்பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. இதில் 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் காலை மற்றும் மாலை நேலங்களில் பஸ்களை இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி