விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-06 16:23 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து சேலம், அரூர், தர்மபுரி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் சாலைகளில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களையும் பயன்படுத்துகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அதிக ஒலி எழுப்பும் பஸ் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்