தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள், பல்வேறு ஊர்களில் இருந்து காலை, மாலை நேரங்களில் பஸ்களில் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
-சுப்ரியா, ஏரியூர், தர்மபுரி.