தர்மபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் பி.பள்ளிப்பட்டியில் பஸ் நிறுத்தத்தில் இருபுறமும் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள், வயதானவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பஸ் வரும் வரை நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே இருபுறமும் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-சூர்யா, ஓசூர்.