தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை மையமாக கொண்ட 4 ரோடு பகுதி குறுகிய சாலை என்பதால் சாலையின் இருபுறம் வாகனங்கள் வந்து செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி 4 ரோடு பகுதியை ஒரு வழிச்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-்ஞானவேலன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.