நாமக்கல்லில் இருந்து தூசூர் வழியாக செல்லும் பஸ்கள் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது. பின் 2 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பஸ் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குருமம்பட்டி வழியாக வளையப்பட்டிக்கு மீண்டும் பஸ் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். புகார் குறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-பிரபாகரன், நாமக்கல்.