தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் ஏரியூர் வந்து செல்கின்றனர். இங்கு பிரதான சாலையோரம் உள்ள கடைகள் முன்பு இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபதி, ஏரியூர், தர்மபுரி.