திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் மக்கள் குறைதீர் கூட்டரங்கு, வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளி அலுவலகம் செயல்படுகிறது. தரைத்தளத்தில் உள்ள கழிவறை துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். கலெக்டர் அலுவலகம் கட்டி திறந்து 2 மாதங்கள் ஆகிறது. அதற்குள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தமாக பராமரிப்பார்களா?
-அசோகன், திருப்பத்தூர்.