கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2024-09-15 20:23 GMT

வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து சி.எம்.சி. சர்க்கிள் வரை பாகாயம்-காட்பாடி சாலையோரம் பஞ்சர் கடைகள் உள்ளன. அதன் வாசலில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர் வாருவது இல்லை. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. கால்வாய் கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, தினமும் கால்வாயை தூர்வாரினாலேயே கழிவுநீர் விரைந்து ஓடும். மாநகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் கழிவுநீர் கால்வாயை தூர்வார எப்போது விடிவு காலம் பிறக்கும்?

-அப்துல்நாசர், வேலூர்.

மேலும் செய்திகள்