கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2022-12-14 12:19 GMT

ஜோலார்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் தெருவில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. கால்வாயில் கழிவுநீர் தடையின்றி செல்ல கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆர்.மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பாச்சல்.

மேலும் செய்திகள்